புதுச்சேரி வில்லியனூர் தொகுதிக் குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நகர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளன. அதுபோன்ற நகர்களில் உள்ள பகுதி மக்கள் தொகுதியின் எம்எல்ஏவும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவாவிடம் முறையிட்டு தங்கள் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும்படி வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் சிவாவும் பல்வேறு நகர் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்தவகையில் நேற்று வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட கொம்பாக்கம் பாலமுருகன் நகர் பகுதி மக்களின் அழைப்பை ஏற்று சிவா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த நகர் மக்கள், “சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவான நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, தெரு மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்” என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பாலமுருகன் நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா உறுதியளித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
34 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
50 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
55 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago