இலங்கைக்கு கடத்த வைத்திருந்த : மேலும் 210 கிலோ சுறா பீலி பறிமுதல் :

By செய்திப்பிரிவு

காயல்பட்டினத்தில் பதுக்கி வைத்திருந்த 210 கிலோ சுறா பீலியை தேவிபட்டினம் மெரைன் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலிருந்து சரக்கு வாகனத்தில் கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட சுறா பீலி (சுறா துடுப்பு), கடல் அட்டை, ஏலக்காய் ஆகியவற்றை ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் மெரைன் போலீஸார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காயல்பட்டினத்தைச் சேர்ந்த சதாம் உசேன் (28), கீழக்கரையைச் சேர்ந்த காசிம் முகம்மது உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். சதாம் உசேனிடம் நடத்திய விசாரணையில் இலங்கைக்கு கடத்துவதற்காக காயல்பட்டினம் குடோனில் வைத்திருந்த மேலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 210 கிலோ சுறா பீலி மற்றும் ரூ.2.65 லட்சத்தை நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

40 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்