மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் - ஆற்காட்டில் காவலரை தாக்கிய மர்ம நபர்கள் :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கீரைக்கார தெருவைச் சேர்ந்தவர் கணபதி (30). ஆற்காடு புங்கனூரில் வசிப்பவர் தணிகைவேல் (31). இவர்கள், இருவரும் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் காவலர் களாக பணியாற்றி வருகின்றனர். கணபதியும், தணிகைவேலு வும் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த பிறகு ஆற்காடு திரும்பியுள்ளனர்.

பின்னர், ஆற்காடு கிளைவ் பஜார் பகுதிக்குச் சென்ற இருவரும் அங்கு தனி இடத்தில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் வேறு சிலரும் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த ஒரு இளைஞரிடம் சென்ற காவலர் கணபதி, ‘இங்கு யார் கஞ்சா விற்கிறார்கள்’ என கேட்டுள்ளார். அதற்கு, அந்த இளைஞர் தெரியாது என்று கூறவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதைப் பார்த்த மற்ற நபர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்ட கணபதியை தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த தணிகைவேல் அந்த இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு நகர காவல் துறையினர் விரைந்து வந்து 3 பிடித்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்