மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறும் தேர்வில் கடலூர் மற்றும் கள்ளக் குறிச்சி மாவட்டங்களில் தலா 122 மாண வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளிகளில் பயிலும் மாணவ, மா ணவிகளின் குடும்பச் சூழலால் ஏற்படும் இடைநிற்றலை தடுத்திடும் வகையில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக இந்திய அளவில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்காக மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9 முதல் 12 -ம் வகுப்பு வரையில் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அதன்படி 2021-22-ம் கல்வியாண்டில் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில் கடலூர் மாவட்டத்தில் 3,550 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எதிர்கொண்டதில் 122 பேர் தேர்ச்சி பெற்றுள் ளனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,756 மாணவ, மாணவிகள் எதிர்கொண்டு122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்க ளுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரையில் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் அரசால் வழங்கப்படும் என்று கல்வித்துறை அலுவலர்கள் தெரி வித்தனர்.
தற்போது பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்க ளுக்கு அந்தந்தப் பள்ளிகளின் தலைமையா சிரியர்கள் விவரங்களை தெரியப்படுத்தி, தேர்ச்சி பெற்றவுடன் மேற்கொண்டு இணை யதளத்தில் பதிவு செய்ய வேண்டிய பணிகளையும் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே மேற்கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
7 mins ago
தமிழகம்
38 mins ago
சுற்றுலா
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
2 hours ago