ஓசூர் தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் கரோனா நிவாரணத் தொகை இரண்டாவது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப்பொருட்களை ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வழங்கினார்.
சொப்பட்டி, பாகூர், சேவகானப்பள்ளி, ஈச்சங்கூர், சொக்கார்சனப் பள்ளி, அலசப் பள்ளி, பேரிகை, சிம்பல்தொட்டி ஆகிய கிராமங்களிலும் மற்றும் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் காலனி, கும்பார்பேட்டை, பார்வதிநகர், கொத்தூர் ஆகிய இடங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத்தொகை இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பயனாளிகளுக்கு ரூ.2ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினார்.
ஓசூர் மாநகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர் சின்னப்பில்லப்பா, சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ், கோபால், சர்வேஷ், மாதேஸ்வரன், நாகராஜ், சென்னீரப்பா, கே.ஜி.பிரகாஷ், முனிராஜ், நாகராஜ், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
24 mins ago
கல்வி
4 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago