3வது அலை வந்தாலும் எதிர்கொள்வோம் : கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ஆளுநர் உறுதி

By செய்திப்பிரிவு

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 100 மையங்களில் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கியது. காந்தி வீதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமிநாராயணன் மற்றும் பல்வேறு துறை அதி காரிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, ‘‘ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் புதுச்சேரியை கரோனா இல்லாத மாநிலமாகவும், முழுவதுமாக தடுப் பூசி போடப்பட்ட மாநிலமாகவும் மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தயக்கம் நீங்கி, அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகை தருவது மகிழ்ச்சி அளிக் கிறது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

புதுச்சேரியில் ஒரு நாள் கூட, ‘மக்களுக்கு தடுப்பூசி இல்லை’ என்ற நிலை வரவில்லை. தடுப்பூசி இல்லை என்று யாரும் திரும்பிச் செல்லவில்லை. அதற்காக நிர்வாகத்தை பாராட்டுகிறேன்.

பிரதமரும் 21-ம் தேதியில் இருந்து தேவையான அளவு தடுப் பூசிகள் இலவசமாக தருவதாக அறிவித்துள்ளார். இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாட் டில் இலவசமாக தடுப்பூசி தரப் படுவதும், அதனால் மக்கள் பலன டைவதும் இந்தியாவில் தான் நடந்து வருகிறது.

சில மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நேரத்தில் புதுச்சேரியில் தளர்வுக ளுடன் கூடிய ஊரடங்குதான் கடைபிடித்தோம். மக்களின் வாழ்வாதாரம் கவனத்தில் கொள்ளப் பட்டது. மக்களுக்கு விழிப்புணர்வு வந் துள்ளது. அனைவருக்கும் முகக் கவசம் அணியும் பழக்கம் வந்து விட்டது. இதற்காக மக்களை பாராட்டுகிறேன். நோய் தொற்றுகுறைந்திருக்கிறது. இறப்பு விகி தமும் குறைந்து வருகிறது.

கரோனா மூன்றாவது அலை வரக்கூடாது என்று இறைவனை தினமும் வேண்டுகிறேன்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடுகளில் 3வதுஅலை மிதமானதாகவே வந்துள்ளது. மூன்றாவது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு புதுச்சேரி அரசு தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்