கிராமிய நாட்டுப்புற தெம்மாங்கு இசைக் கலைஞர்கள் நலச்சங்க மாநில துணைத் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று கோரிக்கை மனுவை வழங்கினர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள் ளதாவது: கரோனா ஊரடங்கால் கோயில் திருவிழாக்கள் இல்லாததால், கடந்த 2 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து சிரமமான சூழ்நிலையில் உள்ளோம். குழந்தைகளுக்கு பால் வாங்கிக்கூட தர முடியாத நிலை உள்ளது. கிராமியக் கலைஞர்களின் பட்டினிச் சாவை தடுக்க கோயில் திருவிழாக்களை சமூக இடைவெளியுடன் நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை மூலமாக மாதம் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
23 mins ago
விளையாட்டு
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago