திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக அமர் குஷ்வாஹா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவன் அருள், பத்திரப்பதிவுத் துறை ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் இயக்குநராக இருந்த அமர் குஷ்வாஹா, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக அமர் குஷ்வாஹா நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

அமர் குஷ்வாஹா உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 2012-ம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு தேர்வானார். 2013-14 வரை திருவள்ளூரில் உதவி பயிற்சி ஆட்சியராக பணியாற்றினார். 2014-17 வரை சிவகாசி உதவி ஆட்சியராகவும், 2017-19 காலகட்டத்தில் ஊட்டியில் திட்ட இயக்குநராகவும், 2019-21 வரை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் இயக்குநராக பணியாற்றி வந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

உலகம்

5 hours ago

மேலும்