ராமேசுவரத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உடனடியாக கடன் தவணைத் தொகையை திருப்பிச் செலுத்துமாறு தனியார் நிதி நிறுவனங்கள் நெருக்கடி தந்து மிரட்டுவதாகப் புகார் எழுந் துள்ளது.
ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன் குமார் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் நேற்று வந்தனர். தவணைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு நிதி நிறுவனங்கள் நெருக்கடி தருவதாக புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் ரூ.40 ஆயிரம் கடன் பெற்றிருந்தோம். அதை மாதம் ரூ.1,700 வீதம் 24 மாத தவணையில் திருப்பிச் செலுத்த வேண்டும். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றி இருப்பதால் தவணைத் தொகையை செலுத்த முடியவில்லை.
இந்நிலையில், நிலுவையில் உள்ள மாத தவணைத் தொகையையும் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என்று நிதி நிறுவனங்கள் நெருக்கடி தருகின்றனர். தவணைத் தொகையை வசூல் செய்ய வரும் நபர்கள், எங்களை அவதூறாகப் பேசி மிரட்டுகின்றனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
வாழ்வியல்
2 hours ago
க்ரைம்
42 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
4 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
5 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago