தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதிதூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூர் மற்றும் சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணியும், கொற்கையில் முதல் கட்டஅகழாய்வுப் பணியும் தொடங்கியது. சிவகளையில் நடைபெற்ற அகழாய்வில் கல் வட்டங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. கொற்கையில் 2,700 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமான அமைப்பும், சங்கு அறுக்கும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இந்த அகழாய்வுப் பணிகள் கடந்த மே 10-ம்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது தொற்றின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் மீண்டும் அகழாய்வுப் பணிகள்நேற்று தொடங்கின. முதல் கட்டமாக அகழாய்வு செய்யப்படும் இடங்கள் மற்றும் குழிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வரும் செப்டம்பர் மாதம் வரை தான் தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. எனவே, தொல்லியல் துறை அதிகாரிகள் அகழாய்வுப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, ‘‘தாமிரபரணி ஆற்றின் கரையில் 37 இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தோம். 37 இடங்களிலும் அகழாய்வு செய்ய நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்தது.
ஆனால், பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது வசவப்பபுரம் பகுதியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் மழையினால் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல் கட்டமாக வசவப்பபுரம் பகுதியில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்யவேண்டும். மேலும், கொங்கராயக்குறிச்சியில் மணலில் புதைந்துள்ள ஆலயங்களை நவீன கருவி மூலம் வெளிக் கொணர வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
46 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுலா
3 hours ago