அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பூக்கார தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (35). கடந்த ஆண்டு கோகுல் என்பவர் கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றவர் கடந்த 3-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். அரக்கோணம் போலாட்சியம்மன் கோயில் உள்ள நண்பர் மைகண்ணன் (37) என்பவரது வீட்டுக்கு மதுபானம் குடிக்க கடந்த 6-ம் தேதி பிற்பகல் கார்த்திக் சென்றார்.
அப்போது, கோகுல் கொலைக்கு பழிவாங்க சசிகுமார் தலைமையிலான கும்பல் மைகண்ணன் வீட்டில் புகுந்து கார்த்திக்கை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். இதுதொடர்பாக அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சசிகுமார் (27), ஜெகன் (23), கண்ணன் (24), குருபிரசாத் (25), தியாகராஜன் (25), மைகண்ணன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இதற்கிடையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அரக்கோணம் டவுன்ஹால் சுப்பராய முதலியார் தெருவைச் சேர்ந்த சோபன்பாபு (24), தருமராஜர் கோயில் தெருவைச் சேர்ந்த பரசுராமன் (19) ஆகியோரை காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
உலகம்
5 hours ago
வாழ்வியல்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
8 hours ago