முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கப்படுகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ரொக்கமாக ரூ.50 ஆயிரம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவையும் வழங்கப்படும். 2021-ம் ஆண்டுக்கான விருதுக்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப் பிக்கலாம். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்ததற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் சமுதாய நலனுக்காக தொண்டாற்றி இருக்க வேண்டும். அவர்களின் தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், பொதுத் துறை நிறுவனம், பல்கலைக் கழகம், கல்லூரி, பள்ளிகளில் பணியாற்றுவோர் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தகுதி வாய்ந்தவர்கள், வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
30 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago