மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல் :

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர்(பொ) செ.பொன்னம்மாள் தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, எஸ்.பி சீனிவாசன், எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் கிளை சார்பில் 2 வென்டிலேட்டர்கள், 3 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 1000 முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜிடம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இணை இயக்குநர் உமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்