கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், திருவிடைமருதூர் வட்டக்கிளை செஞ்சிலுவை சங்கம், ரெட்கிராஸ், ஒன்றிய இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் கரோனா கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
செஞ்சிலுவை சங்க கிளைத் தலைவர் வி.எம்.பாஸ்கரன் தலைமை வகித்தார். ஒன்றிய இளையோர் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் ச.கார்த்திகேயன் வரவேற்றார். கரோனா கட்டுப்பாட்டு அறையை அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் திறந்து வைத்து, கரோனா கட்டுப்பாட்டு தொலைபேசி எண் மூலம் வந்த அழைப்பில் பேசி, கட்டுப்பாட்டு அறை சேவையைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறையில் பணியாற்ற உள்ள தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கரோனா தொடர்பாக சேவைகளைப் பெற 73393 78445, 70924 29449 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம், கரோனா தடுப்பூசி செலுத்துமிடங்களின் விவரம், பரிசோதனை நடைபெறும் இடங்கள், வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கான ஆலோசனைகள், மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை வழங்கப்படவுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
31 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
39 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
45 mins ago
ஆன்மிகம்
55 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago