அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரி, ஓசூர் அரசுக் கல்லூரிகளில் கடந்த 2 ஆண்டுகளாக கல்லூரி முதல்வர்கள் நியமிக்கப் படவில்லை. இதனால் கல்லூரிப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் தாமோதரன் கூறியதாவது:

கரோனா காலத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதேபோல், அடுத்த மாதம் கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசுக் கல்லூரி முதல்வர் மற்றும் 2-ம் நிலை முதல்வர் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் 60-க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த பிப்., மாதம் 47 கல்லூரிகளுக்கு தகுதியான 2-ம் நிலை கல்லூரி முதல்வர்களின் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் தயாரித்து வைத்திருந்தது.

ஆனால் தேர்தல் அறிவிப்பால் அவை கிடப்பில் போடப்பட்டன. எனவே தமிழக அரசு, தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கல்லூரி முதல்வர், 2-ம் நிலை முதல்வர் பணியிடங் களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்