தமிழக மாநில எல்லையில் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் சேலம் மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் கரோனா எதிரொலியாக ஊரடங்கு கால கட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் ரூ.40 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காய்கறி மற்றும் பழங்களை ஏற்றி வரும் வாகனங் களிலும் மற்றும் கார், இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் கடத்தி வரப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து அத்தகைய வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் மூலமாக ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 40 கார்கள் மற்றும் 80 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மதுவிலக்கு டிஎஸ்பி சங்கர் உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
49 mins ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
5 hours ago