மது கிடைக்காததால் செல்போன் சுத்தம் செய்யும் திரவத்தை குடித்தவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகர் 3வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (47). பொதுப்பணித்துறை டேங்க் ஆபரரேட்டரான இவருக்கு தியோ ரெபரே ஸ்டெல்லா என்ற மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட் டிருந்தது. இதனால் மது கிடைக்காமல் நடராஜன் அவதிப்பட்டு வந்துள்ளார். மதுபானங்கள் கிடைக் காத விரக்தியில் அவர் வீட்டில் செல்போன் சுத்தம்செய்ய வைத்திருந்த திரவத்தை எடுத்து குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த நடராஜனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதுகுறித்து நேற்று முன்தினம் உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடராஜன் இறப்பதற்கு சிலமணி நேரத்துக்கு முன்பு, உடல்நிலை பாதித்து வீட்டில் இருந்த நடராஜனின் தந்தை முனிசாமி (73) இறந்துள்ளார். தந்தையும், மகனும் அடுத்தடுத்து இறந்ததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் மூழ்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்