கரோனா விதிகளை பின்பற்றாத 16 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் :

By செய்திப்பிரிவு

தருமபுரி நகரில் கரோனா விதிகளை பின்பற்றாத 16 கடை களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 7 முதல் 14-ம் தேதி வரை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி அரசு பட்டியலிட்டுள்ள கடைகள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செல்போன் விற்பனை நிலையம், பிரவுஸிங் மையம், ஜவுளிக் கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட கடைகள் இயங்க அரசு அனுமதி வழங்கவில்லை.

அனுமதி இல்லாதபோதும் சில கடைகள் நேற்று தருமபுரி நகரில் ஆங்காங்கே இயங்குவது தருமபுரி நகராட்சி நிர்வாகத்துக்கு தெரிய வந்தது. எனவே, நகராட்சி குழுவினர் தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், அனுமதி இல்லாமல் இயங்கிய மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாமல் இயங்கிய 16 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

க்ரைம்

17 mins ago

விளையாட்டு

46 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்