சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மின்னல் தாக்கி சிறுவன் உட்பட 3 பேர் நேற்று மாலை உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே உள்ள நல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சோலைராஜ். இவரது மனைவி சண்முகசுந்தரவள்ளி (52), மகன் கருப்பசாமி (16) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி தங்கமாரியம்மாள் (45) உள்ளிட்ட சிலர் நேற்று மாலை அங்குள்ள துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்றனர். அங்கு பலத்த மழை பெய்ததால், கோயிலின் வெளிப்பகுதியில் நின்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் சண்முகசுந்தரவள்ளி, கருப்பசாமி, தங்கமாரியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த இருவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சாத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
53 mins ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago