பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை தஞ்சை அல்லது திருச்சியில் அமைக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளது:

சென்னை கிண்டியில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகள் உள்ள நிலையில், பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை தஞ்சை அல்லது திருச்சியில் அமைத்தால், டெல்டா மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏற்கெனவே எய்ம்ஸ் மருத்துவமனையை திருச்சியில் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் செய்த நிலையில் அது மதுரையில் அமைய உள்ளது.

ஆகவே, சென்னையில் உருவாக்கப்பட உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை மாற்றியோ அல்லது அதற்கு நிகரான வேறொரு மருத்துவமனையையோ தஞ்சை அல்லது திருச்சியில் அமைக்க முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. எனவே, அரசு பொதுமக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக, திமுக எம்எல்ஏக்களும், அனைத்து அரசியல் கட்சியினரும் அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்