சசிகலா தலைமையில்தான் அதிமுக கட்சி இயங்கும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து

By செய்திப்பிரிவு

அதிமுக கட்டாயம் சசிகலா தலைமையில்தான் இயங்கும். என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், கீழச் சிவல்பட்டியில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது வரை தினமும் 20 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஊரடங்கை நீட்டிப்பதுதான் சரியான நடவடிக்கை. தடுப்பூசி பற்றாக்குறைக்கு பிரதமர் மோடி மட்டும்தான் காரணம். இதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. தடுப்பூசியை கொள்முதல் செய்வது மத்திய அரசுதான். இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம் தான். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதிமுக கட்டாயம் சசிகலா தலைமையில்தான் இயங்கும். பழனிசாமி சரித்திர விபத்தால், ஏதோ ராஜயோகத்தால் முதல்வராக வந்தவர். அவரது காலக்கட்டம் முடிந்துவிட்டது, என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

50 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்