வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க பதிவுதாரர்களுக்கு வாய்ப்பு :

By செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,‘‘ நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை, பல்வேறு காரணங்களால் பலர் புதுப்பிக்கத் தவறியுள்ளனர். பணி வாய்ப்பைப் பெறும் வகையில், அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.அதன்படி, ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் இணையதளம் வழியாக தங்கள் பதிவினை பதிவுதாரர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள், மேற்குறிப்பிட்ட தேதிக்குள் தொடர்புடைய வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பம் அனுப்பி புதுப்பித்துக் கொள்ளலாம். அத்துடன் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் இணையதள முகவரியில், ஆன்லைனில் விண்ணப்பித்தும் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்