பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் - ஆக்சிஜன் சேகரிப்பு மையம் அமைக்க இடம் தேர்வு :

By செய்திப்பிரிவு

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சேகரிப்பு மையம்அமைக்கப்படும் இடத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பத்மநாபபுரம் அரசு தலைமைமருத்துவமனை கரோனா பராமரிப்பு மையத்தில்படுக்கை வசதிகள், ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். 108 ஆம்புலன்ஸ் சேவை பணியாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முழு ஊரடங்குக்கு குமரிமாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிசமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், முக கவசம் அணிந்து தொற்று நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார். ஆய்வின்போது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் பிரகலாதன், தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்