செங்கல்பட்டு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுகிறது. இரவிலும் மின்வெட்டு உள்ளதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். கரோனா தொற்று ஏற்பட்ட பலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள இயலாத நிலை உள்ளது.
இதுகுறித்து மின் வாரியத்தினர் கூறும்போது, "சமீபத்தில் மழை பெய்ததால் பல இடங்களில் இன்சுலேட்டர் வெடித்துவிட்டது. அதைக் கண்டுபிடித்து சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. இதுவும் மின் தடைக்கு ஒரு காரணம்.
தற்போது அனைத்தும் சரி செய்யப்பட்டு, மின் விநியோகம் சீராக உள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டு உள்ளதால் மின்தடை ஏற்படாதவாறு கவனமுடன் செயல்படுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
சுற்றுச்சூழல்
15 mins ago
தமிழகம்
15 mins ago
சுற்றுலா
30 mins ago
வாழ்வியல்
31 mins ago
வாழ்வியல்
40 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
55 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago