திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வாழ்வாதாரம் இழந்த 108 சலவை தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா 25 கிலோ அரிசி மூட்டை வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல தரப்பு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சலவை தொழிலாளர்களும் உள்ளனர். சலவை தொழிலில் ஈடுபட்டுள்ள அவர்களின் வாழ்வாதாரம் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை நகரம் போளூர் சாலையில் உள்ள பெரியார் நகரில் வசிக்கும் சலவை தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டை நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. சலவை தொழிலாளர்கள் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், வருவாய் இல்லாமல் அவதிப்பட்டு வந்த 108 சலவை தொழிலாளர்கள் குடும்பத்துக்கு முதற்கட்ட நிவாரணமாக தலா 25 கிலோ அரிசி வழங்கப்பட்டது. அதேபோல், அதே பகுதியில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ள 4 பேரது குடும்பத்துக்கும் தலா 25 கிலோ அரிசி மூட்டை வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
11 mins ago
இந்தியா
16 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
24 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
30 mins ago
ஆன்மிகம்
40 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago