உடுமலை: திருப்பூர் மாநகரம், தாராபுரம், காங்கயம், பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக, கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நியாயவிலைக் கடை ஊழியர்களால் பயனாளிகளுக்கு வீடு, வீடாக டோக்கன் விநியோகிக்கும் பணி நிறைவடைந்த நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அரசின் நிவாரணத் தொகையை பயனாளிகள் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணகுமார் கூறும்போது, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 1,135 நியாயவிலைக் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 7,51,045. இதுவரை 3,00,224 (40 சதவீதம்) குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை விநியோகிக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் விரைவில் விநியோகிக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 mins ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago