சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உணவின்றி தவித்த கழைக்கூத்தாடிகளுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் அருகே 50-க்கும் மேற்பட்ட கழைக்கூத்தாடிகள் கூடாரம் அமைத்து வசிக்கின்றனர். இவர்கள் கிராமம், கிராமமாகச் சென்று சர்க்கஸ் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தி பிழைப்பு நடத்தி வந்தனர். தற்போது கரோனா ஊரடங்கால் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
மேலும் உணவின்றி தவித்து வந்தனர்.
இதை அறிந்த சிங்கம்புணரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன் கழைக்கூத்தாடிகளுக்கு ஒரு குடும்பத்துக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகளை சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார். ஆய்வாளருக்கு சக போலீஸார் ஒத்துழைப்பு அளித்தனர்.
இதேபோல், சிங்கம்புணரி அருகே சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்துக்குமார் பிரான்மலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரும், இவரது மனைவியும் இணைந்து வீட்டில் உணவு சமைத்து ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
12 hours ago