அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு :

By செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டை தொகுதிக்குட் பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதிக்குட் பட்ட பச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனை மற்றும் அக்ரகாரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள கரோனா சிறப்பு சித்த மருத்துவ மையம் மற்றும் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் ஜோலார்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்டவை களை மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்கு தேவை யான வசதிகள், நோயாளிகளுக்கு தேவைப்படும் வசதிகள் என்ன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர், தொகுதி சட்டப் பேரவைஉறுப்பினர் என்ற முறையில் தேவைகளை விரைவாக நிறைவேற்று வதாக மருத்துவர்களிடம் அவர் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, கரோனா நோயாளிகளிடம் அவர் நலம் விசாரித்தார். விரைவில் குணமடைந்து வீடு திரும்ப மருத்துவர்கள் தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பார்கள் என ஆறுதல் கூறினார்.

பிறகு, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி, மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறதா? என அவர் கேட்டறிந்தார். அப்போது, அரசு மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்