‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச் சந்தையில் விற்க முயன்ற வழக்கில் செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரைச்சேர்ந்த தினேஷ்(23) என்ற இளைஞர் கடந்த 12-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8 குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து, கள்ளச் சந்தையில் விற்பதற்காக தினேஷிடம், ரெம்டெசிவிர் மருந்தை அளித்தது தொடர்பாக இருவரை போலீஸார் தேடி வந்தனர். அதில், ஒருவரான, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த மருத்துவர் அதிபன்(28) என்பவரை நேற்று முன்தினம் போலீஸார் திருச்சியில் கைது செய்தனர்.
அதிபனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த அதிபன், அரசு மருத்துவமனை ஊழியர்கள் மூலம் குறைந்த விலைக்கு ரெம்டெசிவிர் மருந்தை பெற்று, அதை அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதற்கு தினேஷிடம் அளித்தது தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
தமிழகம்
8 mins ago
இந்தியா
12 mins ago
க்ரைம்
6 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
33 mins ago
தொழில்நுட்பம்
38 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
3 hours ago
கல்வி
5 hours ago