புதுவை சிவப்பு அட்டைத்தாரர்களுக்கு இலவச அரிசி தர - ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் வந்த 2,600 டன் அரிசி :

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகள் பயன் பெற ‘பிரதம மந்திரி கரிப் கல்யான் யோஜனா-III’ என்ற திட்டத்தின் மூலம், நபர் ஒன்றுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி புதுச்சேரியில் சிவப்பு அட்டைத்தாரர்களுக்கு இலவச அரிசி விநியோகம் தொடங்கப்பட்ட உள்ளது. முதல்கட்டமாக 12 தொகுதிகளில் சிவப்பு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதன்படி மத்தியஅரசு தொகுப்பு மூலம் ஒடிசா மாநிலத்தில் இருந்து 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் 2,600 டன் அரிசி சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலைய குட்செட்டிற்கு நேற்று வந்தன. அவற்றை லாரிகள் மூலம் திருவண்டார் கோயிலில் உள்ள இந்திய உணவு கழக, உணவுத்தானிய சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரிசி மூட்டைகள் புதுச்சேரி அரசு மூலம் எடுக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்