முகோர் மைகோசிஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையில்லாமல் மருந்து விற்க தடை :

By செய்திப்பிரிவு

முகோர் மைகோசிஸ் பாதிப்புக்கு உள்ளாகுவோருக் கான ஊசியை மருத்துவர் பரிந்துரையில்லாமல் புதுச்சேரியில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்களிடம் உள்ள இருப்பு விவரத்தை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மருந்துகள் கட்டுப்பாட்டு துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘பிளாக் ஃபங்கஸ்’ தொற்று என்பது முகோர் மைகோசிஸ்(mucor mycosis) என அழைக்கப்படுகிறது. கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கு மருந்து உட்கொள்ளும்போது சிகிச்சையில் மிகவும் மோசமான நிலையின்போது அதிகளவில் ஸ்டீராய்டு மருந்து அளிக்கப்பட்டிருந்தால், இந்த தொற்றுக்கு ஆளாகலாம். இந்த பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு வழங்கபடும் இன்ஜ். அம்போடெரிசின் பி (Inj. Amphotericin B) தற்போது, அதிகமாக தேவைப்படும் சூழல் உருவாக வாய்ப்பு இருப்பதால் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள மருந்து சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்க கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. மருந்து விற்பனை தொடர்பான தகவல்களை மருந்துக் கட்டுபாட்டு துறைக்கு மின்னஞ்சல் (ddc.pon@gmail.com) மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

58 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்