கடந்த 2 ஆண்டுகளாக விடாமல் விரட்டும் கரோனா - மலர் சாகுபடி தொழில் முடங்கியதாக சாகுபடியாளர்கள் விரக்தி :

By ஆர்.டி.சிவசங்கர்

கரோனா ஊரடங்கால் தொழிலே முடங்கிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் நீலகிரி மாவட்ட மலர் சாகுபடியாளர்கள்.

நீலகிரி மாவட்டத்தில் லில்லியம்,கார்னேசன், ஜெர்பரா, கிரிசாந்தம்உள்ளிட்ட கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 300-க்கும்மேற்பட்ட விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும், 3,000தொழிலாளர்கள் வேலைவாய்ப்புபெறுகின்றனர். இங்கிருந்து மொட்டுகளாக அறுவடை செய்யும் கொய் மலர்கள், பெங்களூரூ, கோவாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சர்வதேசஅளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கரோனா தொற்று காரணமாக,ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால்,மலர்சாகுபடியே முடங்கிவிட்டதாக மலர் சாகுபடியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கொய்மலர் உற்பத்தியாளர்கள் கூறும்போது, ‘‘பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பசுமைக் குடில்கள் அமைத்து கொய்மலர்கள் சாகுபடி செய்யப்பட்டன. ஊரடங்கு உத்தரவால், ரூ.20 கோடி மதிப்பிலான கொய்மலர்கள் சந்தைக்கு அனுப்ப முடியாமல் வீணாகின. தற்போது கரோனா இரண்டாம் அலை காரணமாக, விழாக்கள் மற்றும் சுப காரியங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மலர்களை வாங்கவேஆளில்லை. அறுவடை செய்யப்பட்ட மலர்கள், மண்ணுக்கே உரமாகி வருகின்றன’’ என்றனர்.

கார்னேசன் மலர் நாற்றுகள் உற்பத்தியாளர் புவனேஷ் கூறியதாவது: கடந்தாண்டு முதல் ஆறு மாதங்கள் கரோனாவால் பூக்கள் விற்பனையாகவில்லை. இந்தாண்டு கரோனா இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மலர் ஏற்றுமதியாளர்கள், எங்களிடமிருந்து மலர்களை கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டனர்.

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சந்தை பெங்களூரு. கர்நாடகமாநிலத்தில் குறிப்பாக பெங்களூருவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், மலர்களே வேண்டாம் என்கின்றனர். இதனால், ரூ.40-50 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் தடைப்பட்டு விட்டது. மலர் சாகுபடிக்கு வங்கிக் கடன் மற்றும்அரசின் உதவி இல்லாததால், கடந்தாண்டு மலர் சாகுபடியாளர்களில் 50 சதவீதத்தினர் தொழிலை கைவிட்டு, மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். மலர் சாகுபடியாளர்களுக்கு நிவாரணம் வழங்க தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

52 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்