நிலக்கோட்டையில் காய்கறி சந்தையை திடீரென இடமாற்றம் செய்ததைக் கண்டித்து வியாபாரிகள் காய்கறிகளை சாலையில் கொட்டிப் போராட்டம் நடத்தினர்.
நிலக்கோட்டையில் பஸ் நிலையம் அருகே தினசரி காய்கறி சந்தை செயல்படுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் நேற்று திடீரென மூடியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்கறி சந்தையை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கு மாற்றியது. அடிப்படை வசதிகள் செய்துதராமல் இடமாற்றம் செய்ததைக் கண்டித்து காய்கறிகளை வியாபாரிகள் சாலையில் கொட்டிப் போராட்டம் நடத்தினர்.
இதனால் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தினசரி சந்தை நடத்த உரிய வசதிகள்செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என வியாபாரிகள் கேட்டுக் கொண்டனர்.
விருதுநகர்
இதையடுத்து கடந்த ஆண்டைப்போல காய்கறி மார்க்கெட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி மைதானம், உழவர் சந்தை, அல்லம்பட்டி முக்கு அருகே உள்ள மாநகராட்சி திடல் ஆகிய இடங்களுக்கு மாற்ற அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து பஜாரில் நேற்று காலை மறியல் செய்தனர். அவர்களிடம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து வியா பாரிகள் நடத்திய கூட்டத்தில், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்யவும், பஜாரில் வெங்காய மொத்த வியாபாரம் செய்யவும், சில்லரை வியாபாரம் செய்யக் கூடாது என்றும், பஜாரில் பழ வியாபாரம் செய்யக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
இந்தியா
21 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
30 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
53 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago