கிணற்றில் மூழ்கி சிறுவன் மரணம் :

By செய்திப்பிரிவு

கயத்தாறு அருகே அய்யனார்ஊத்து கிழக்கு தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் செந்தூர்ராஜ்(14). அதே பகுதியைச் சேர்ந்த பண்டாரம் மகன் முத்துபாண்டி(17), நூர்மைதீன் மகன் ஜமீன்(17) ஆகிய 3 பேரும் ஊருக்கு தெற்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்றுமுன்தினம் குளிக்கச் சென்றனர்.

அப்போது செந்தூர்ராஜ் தண்ணீரில் மூழ்கினார். சம்பவ இடத்துக்கு சென்ற கயத்தாறு போலீஸார், பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குளியல் தொழிலாளர்களை அழைத்து கிணற்றில் இறங்கி தேடும் பணியை முடுக்கிவிட்டனர். ஆனால், இரவு வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று அதிகாலை செந்தூர்ராஜ் உடல் தண்ணீரில் மிதந்தது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்