-சிங்கிள் காலம்- - ஸ்டாலினுக்கு சவுராஷ்ட்ர முன்னேற்ற பேரவை வாழ்த்து :

By செய்திப்பிரிவு

முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழக சவுராஷ்ட்ர முன்னேற்றப் பேரவையினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இப்பேரவையின் தலைவர் ஓ.வி.ஆர்.எம்.ராஜ்குமார், பொதுச் செயலர் எஸ்.ஆர்.குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மொழிவாரி சிறுபான்மையினருக்கான சமூகப், பொருளாதார மேம்பாட்டுக் கழகம் உருவாக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். தமிழக மேல்சபையை உருவாக்கி அதில் சவுராஷ்ட்ர சமூகத்துக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணி மண்டபம் அமைக்க வேண்டும். கைத்தறித் துணி மற்றும் உற்பத்தி செய்த சேலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் கரோனா நிவாரணத் தொகையை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

43 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்