ஆலத்தூர் தொழிற்பேட்டையில் தடுப்பூசி முகாம் :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு ரசாயனத் தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், மேற்

கண்ட தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும், 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

ஊராட்சி நிர்வாகம் மற்றும் சிப்காட் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமைவட்டார வளர்ச்சி அலுவலர்வெங்கட்ராகவன் தொடங்கிவைத்தார். இதில், செம்பாக்கம் பொதுசுகாதார மையத்தை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தொழிலாளர்களுக்கு தடுப்பூசிபோடும் பணிகளை மேற்கொண்டனர்.

முகாமில், வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி, தனியார் நிறுவன மேலாளர் பியூலா, முகாம் ஒருங்கிணைப்பாளர் கருணாகரன், ஊராட்சி செயலர்கள் அனிதா, கோபால் மற்றும் தொழிற்பேட்டை நிர்வாக மேலாளர் விமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

16 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்