கோவில்பட்டியில் உள்ள செவல்குளம் ஓடையில் தடுப்பு கம்பிகள்அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள செவல்குளம் நீரோடையில் பூவனநாத சுவாமி திருக்கோயில் தேவஸ்தான பயன்பாட்டுக்கு உட்பட்ட 108 கடைகள் மற்றும் 25 தனிநபர் கடைகள் இருந்தன. கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் முதல் ரயில்வே மேம்பாலம் வரை சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றது.
ஓடை மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றிய பின்னரே, சாலை விரிவாக்க பணிநடைபெற வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து படிப்படியாக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. ஆனால், அதன்பின்னர் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், ஓடையில் தடையின்றி தண்ணீர் செல்கிறது. ஆனால், சாலையோரம் அமைந்துள்ள செவல்குளம் ஓடை பகுதியில் தடுப்பு கம்பிகள் அமைக்காததால், அந்த பகுதி கார்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது.
சாலையோரம் ஓடை உள்ளதால், அங்கு தடுப்பு கம்பிகள் அமைத்து, பாதசாரிகள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதையும் அமைக்கவேண்டும். மேலும், இளையரசனேந்தல் விலக்கில் இருந்து சத்யபாமா திரையரங்கு வரை சாலை புதிதாக அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்தசாலையை புதிதாக அமைத்து, நடுவே தடுப்புகள் மற்றும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வலைஞர் பக்கம்
36 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago