எளம்பலூர் அரசுப் பள்ளி மாணவிகட்டுரைப் போட்டியில் முதலிடம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் இளைஞர் மற்றும் சூழல்சார் மன்றங்கள் சார்பில் பெரம்பலூர் குறுவள மைய அளவில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கிடையேயான கட்டுரைப்போட்டி அண்மையில் நடைபெற்றது.

குறுவள மைய அளவிலான பள்ளி மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தமிழ் ஆனந்தி முதலிடம் வென்றார். அவருக்கு ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள டேப்லெட் பரிசாக வழங்கப்பட்டது.

பெரம்பலூர் எம்எல்ஏவும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான தமிழ்ச்செல்வன், மாணவி தமிழ் ஆனந்தியை பாராட்டி பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினார். மேலும் பள்ளி தலைமையாசிரியர் (பொ) ராகமஞ்சரி, உதவி தலைமையாசிரியர் பைரவி, ஆசிரியர் சங்க செயலாளர் ராமமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்