வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம் :

By செய்திப்பிரிவு

ஆம்பூர் நகராட்சி மற்றும் வணிகர் சங்கம் சார்பில் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் அதிகரிக் கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆம்பூர் நகராட்சி மற்றும் வணிகர் சங்கம் சார்பில் இந்து தொடக்கப்பள்ளியில் 45 வயதுக்கு மேற்பட்ட வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இம்முகாமினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்.மேலும், முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் நகராட்சி ஊழியர்கள் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன், ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், வணிகர் சங்க பேரமைப்பு மண்டலத் தலைவர் ஆம்பூர்.சி.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்