சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்விக்கிரவாண்டி மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளுக்கு இடையில் உரிய விதிகளை பின்பற்றி தடுப்புகளை ஏற்படுத்தக்கோரிய வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தைச்சேர்ந்த சுரேஷ் மணிவண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமனுவில், ‘‘சென்னை - திருச்சிதேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளுக்கு இடையில் காவல்துறையினர் ஆங்காங்கே சாலையின் குறுக்கே தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
வாகனங்கள் அதிவேகமாக வருவதை தடுக்கும் வகையில்இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் மீதுஇரவு நேர பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் எதுவும் ஒட்டப்படவில்லை. 100 மீட்டருக்கு முன்பாக தடுப்புகள் உள்ளதாக எச்சரிக்கை பதாகைகளும் இல்லை.
தேசிய நெடுஞ்சாலைகள் சட்ட விதிகளின்படி தேசிய நெடுஞ்சாலையில் இஷ்டம்போல தடுப்புகளை அமைக்கக்கூடாது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த தடுப்புகளுக்கு முன்பாக 100 மீட்டர் தொலைவுக்கு முன்பாக அறிவிப்பு பதாகைகள் அமைக்கப்பட வேண்டும். அத்துடன் பிரதிபலிப்புஸ்டிக்கர்கள் ஒட்டவும் அறிவுறுத்த வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த தலைமைநீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதிசெந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசியநெடுஞ்சாலைகள் ஆணையம்,தமிழக அரசு மற்றும் டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
39 mins ago
சுற்றுச்சூழல்
41 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
54 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago