பெண் காவலரை தாக்கி நகை பறிப்பு :

By செய்திப்பிரிவு

சென்னையில் பணி முடிந்து வீடு திரும்பிய பெண் காவலரைத் தாக்கி நகை பறிக்கப்பட்டது.

திருத்தணியைச் சேர்ந்தவர் ரேகா (38). இவர் சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 9.10 மணியளவில் பணியை முடித்து விட்டு ஆவடி, பருத்திப்பட்டில் உள்ள தனது தங்கை வீட்டில் தங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

ஐசிஎப், காண்ஸ்டபிள் சாலை, ஆர்பிஎப் பரேடு மைதானம் அருகே சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் பெண் காவலர் ரேகாவை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து தப்பினர். இதைத் தடுக்க முயன்றதில், பெண் காவலருக்கு தாடை, இடது காலில் காயம் ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

42 secs ago

க்ரைம்

9 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்