தா.பழூர் அருகே தண்ணீர் தேடி வழி தவறி ஊருக்குள் வந்த 2 மான்கள் மீட்பு :

By செய்திப்பிரிவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே நேற்று தண்ணீர் தேடி வழி தவறி ஊருக்குள் வந்த 2 மான்களை பொதுமக்கள் மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தா.பழூர் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றுப்படுகை வனப் பகுதியில் புள்ளிமான்கள், மயில்கள் உள்ளிட்டவை அதிகமாக உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால், தண்ணீரைத் தேடி வரும் மான்கள் வழி தவறி ஊருக்குள் வருவது வழக்கமாகியுள்ளது. இந்நிலையில், மைக்கேல்பட்டி கிராமத்துக்குள் நேற்று வழி தவறி வந்த 2 மான்கள் அப்பகுதி விவசாய நிலத்திலுள்ள வேலிகளில் சிக்கின. இதைக்கண்ட அப்பகுதி இளைஞர்கள், மான்களை பத்திரமாக மீட்டு, வனத் துறைக்கும், தா.பழூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த வனத் துறை அலுவலர் சசிகுமார் உள்ளிட்டோரிடம் இளைஞர்கள் மான்களை ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

7 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்