மே முதல் வாரத்தில் மக்கள் இயக்கம் : புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உறுதி

By செய்திப்பிரிவு

மே முதல் வாரத்தில் மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என, புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

ஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சி வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி ஆலோசனைகளை வழங்கி பேசினார். முன்னதாகசெய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரோனா தடுப்பூசி பற்றியாரும் பயப்பட வேண்டிய அவசிய மில்லை. சட்டப்பேரவை தேர்தலில்தமிழகத்தில் உள்ள

234 தொகுதிகளிலும் பணம்ஆறாக ஓடியுள்ளது. வாக்காளர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய கேடு. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இப்போது நடந்தது உண்மையான, நேர்மையான தேர்தல் அல்ல. எனவே, இந்த தேர்தலை, தேர்தல்ஆணையம் ரத்து செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது. இதை வலியுறுத்தி சென்னையில் எனது தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். நீதிமன்றம் செல்லவும் முடிவு செய்துள்ளோம். ஓட்டப்பிடாரம் பகுதியில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. ஓட்டப்பிடாரத்தை மையமாகக் கொண்டு மே முதல் வாரத்தில் மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்