நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி சமவெளிப் பகுதிகளில் இருந்து வனப் பகுதிகளுக்கு காட்டு யானைகள் வருகை அதிகரித்துள்ளது.
குறிப்பாக குன்னூர்-மேட்டுப் பாளையம் சாலையோரத்தில் குட்டியுடன், காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவ்வப்போது சாலையை கடந்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வடுகன் தோட்டம், குறும்பாடி போன்ற பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது. நேற்று காலை கே.என்.ஆர். நகர் சாலையை குட்டியுடன், யானை கடந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு யானைகள் சென்றன. அதன்பின் போக்குவரத்து தொடங்கியது.
வனத்துறையினர் கூறும் போது, ‘‘உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது யானைகள் சாலையை கடந்து செல்கின்றன. அப்போது அவைகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது. யானைகளை கண்டால் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும், வன விலங்குகளை சாலைகளில் கண்டால், அதை போட்டோ எடுக்க முயற்சிக்கக் கூடாது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
29 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago