கள்ளக்குறிச்சி,விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களில் - 265 பேருக்கு கரோனா: 3 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நேற்று 265 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 179 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 27,157 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 115 பேர் உட்பட 25,775 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 715 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று இருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 298 பேர் உயிரி ழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 41 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளதாக சுகாதாரத்துறை அறி வித்துள்ளது.

இதன் மூலம் 11,280 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 10 பேர் உட்பட 10,906 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 266 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 16,173 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 17 பேர் உட்பட 15,598 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 461 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

30 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்