வேடசந்தூரில் பெண் கொலையில் ஓட்டுநர் கைது :

By செய்திப்பிரிவு

வேடசந்தூர் அருகே பெண்ணை எரித்துக் கொன்ற வழக்கில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சிதா(28). திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அவருக்கும், ஆர்.புதுக்கோட்டையைச் சேர்ந்த மினி பஸ் ஓட்டுநர் ராஜ்குமார்(30) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.

ராஜ்குமாருக்கும் மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் பழக்கத்தால் இரு குடும்பத்திலும் பிரச்சினை உருவானது.

இதையடுத்து இருவரும் தனியாகச் சென்று வாழலாம் என ரஞ்சிதாவை ராஜ்குமார் வற்புறுத்தி உள்ளார். இதற்கு ரஞ்சிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ் குமார் கடந்த மார்ச் 29-ம் தேதி ரஞ்சிதாவை கல்வார்பட்டி- இடையகோட்டை சாலை அருகே காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தார்.

இந்நிலையில், தனது மனைவியைக் காணவில்லை என ரஞ்சிதாவின் கணவர் வேடசந்தூர் போலீஸில் புகார் செய்தார்.இதன் பேரில் போலீஸார் நடத் திய விசாரணையில் ராஜ்குமார் ரஞ்சிதாவைக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ராஜ்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

பால் வியாபாரி கொலை வழக்கு

திண்டுக்கல் அருகே பால மரத்துப்பட்டியைச் சேர்ந்த பால் வியாபாரி முருகேசன் (50). இரு தினங்களுக்கு முன்பு ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தாலுகா போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இந்நிலையில் மாலப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் (24), பாலசுப்பிரமணி (21), சபரிகிரி (20), கார்த்திகேயன் (23), தங்கமணி (24), சந்தனகுமார் (22), பிரகாஷ் (20), அன்பரசன் (27), முருகேசன் (48) ஆகியோரைக் கைது செய்தனர்.

காதல் விவகாரத்தில் முருகேசன் எதிர்ப்பு தெரி வித்ததால், அவரைக் கொலை செய்ததாக முனீஸ்வரன் தனது வாக்குமூலத்தில் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

17 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

25 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

31 mins ago

ஆன்மிகம்

41 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்