உசிலம்பட்டி பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொய்யா மரங்களில் பூக்கள் அதிக அளவில் பூத்திருப்பதால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
உசிலம்பட்டி பகுதியில் நெல், மலர் சாகுபடி பயிர்களுக்கு அடுத்தபடியாக பருத்தி, எள், மக்காச்சோளம், சிறுதானியப் பயிர்கள் மற்றும் மா, கொய்யா போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதாலும் தண்ணீர் பற்றாக் குறையாலும், விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனத்தில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் தற்போது கொய்யாவில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன.
இதுகுறித்து உசிலம்பட்டி அருகே உள்ள வகுரணி விவசாயி மு.அரசு கூறியதாவது:
இயற்கை முறையில் கொய்யா சாகுபடி செய்து வருகிறேன். ஒட்டு ரகங்களான தைவான் பிங்க், அர்க்கா கிரன் ரகங்களை பயிரிட்டுள்ளேன். கடந்தாண்டைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. கடந்தாண்டு பெய்த மழை, இயற்கை உரம் இட்டதால் அதிக எண்ணிக்கையில் பூக்கள் பூத்துள்ளன. இதனால் கடந்த ஆண்டை விட அதிக மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago