சிறுமிக்கு வன்கொடுமை : போக்ஸோவில் சிறுவன் கைது :

By செய்திப்பிரிவு

திருப்பூரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 17 வயது சிறுவனை, மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘திருப்பூரில் 13 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டருகே திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 1-ம் தேதி இரவு பாட்டி வீட்டுக்கு செல்வதாக வீட்டிலிருந்து வெளியில் சென்ற சிறுமி மாயமானார்.

இதுகுறித்து திருப்பூர் தெற்கு அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்அளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், 17 வயது சிறுவன், சிறுமியைக் காதலிப்பதாகக்கூறி, சொந்த ஊருக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரிந்தது. இருவரையும், திருப்பூருக்கு வரவழைத்த மகளிர் போலீஸார், சிறுமியை மீட்டனர். போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

வலைஞர் பக்கம்

51 mins ago

கல்வி

44 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

47 mins ago

ஓடிடி களம்

54 mins ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்