திட்டக்குடி அருகே தேர்தல் தகராறு: 10 பேர் கைது :

By செய்திப்பிரிவு

திட்டக்குடி அருகே தேர்தல் தகராறில் இரு தரப்பை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் ராமநத்தம் காந்திநகரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் தனவேல்(21). இவர் நேற்று முன்தினம் காலை வாக்களிக்க சென்றார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் யாருக்கு வாக்களிக்க போகிறாய் எனக்கேட்டுள்ளனர். அதற்கு தனவேல் என் விருப்பப்படி வாக்களிப்பேன் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அக்கும்பல் தனவேலை தாக்கியுள்ளது. தடுக்கச்சென்ற பெருமாள் என்பவரையும் தாக்கியது. இதில் காயமடைந்த தனவேல், பெருமாள் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாலை தனவேல் தரப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளை அக்கும்பல் சூறையாடியது. இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸார் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, சின்ராஜ்(24), சிவாஜி(62). சரத்குமார்(28), கார்த்தி(25), மாவீரன்(29),மாதவன்(22), பரந்தாமன்(22) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் சிவாஜி என்பவரின் உறவினர் பெண்ணை அங்கிருந்தவர் தகாத முறையில் கூப்பிட்டுள்ளதை பார்த்த சின்ராஜ் மற்றும் சிலர் தட்டிக்கேட்டுள்ளனர். அவர்களை தனவேல், பெருமாள், மாயவன், ராஜா, ரஜினி ஆகியோர் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாயவன்(36), ராஜா(52), ரஜினி(27) ஆகியோரை கைது செய்தனர்.

யாருக்கு வாக்களிக்க போகிறாய் எனக்கேட்டுள்ள னர். அதற்கு தனவேல் என் விருப்பப்படி வாக்களிப்பேன் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்