பிளஸ் 2 மாணவி விஷம் சாப்பிட்டு தற்கொலை :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி அருகே பிளஸ் 2 மாணவி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேர மாநிலம் வில்லியனூர் பாரதி நகரைச் சேர்ந்த சேகர்-ஜோதி தம்பதியின் மகள்ஆனந்தி (17). இவர் வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சேகர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தாய் ஜோதிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நெல்லித்தோப்பில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வரும் சகோதரர் அனிலனுடன் இருந்து ஆனந்தி படித்து வந்தார். இந்நிலையில் ஆனந்தி நேற்று முன்தினம் வீட்டில் விஷம் சாப்பிட்டு மயக்கமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆனந்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்